6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வு- டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு

6491 காலி பணியிடங்களுக்கான குரூப் 4 தேர்வுக்கு இன்று முதல் ஜூலை 15 ஆம் தேதி வரை  ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று டி‌என்‌பி‌எஸ்‌சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. குரூப் 4 பிரிவில் கிராம நிர்வாக அலுவலர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் , நில அளவர் , வரைவாளர் ஆகிய பல்வேறு பதவிகளில் காலியாக உள்ள 6491 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பானையை  டி‌என்‌பி‌எஸ்‌சி வெளியிட்டுள்ளது.

 

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் இன்று முதல் ஜூலை 14 ஆம் தேதிக்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 16 ஆம் தேதி எழுத்து தேர்வுக்கான கட்டணத்தை வங்கி அல்லது அஞ்சலகம் மூலம் செலுத்த வேண்டும்.

 

எழுத்து தேர்வானது செப்டம்பர் 1 ஆம் தேதி நடைபெறும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மாற்று திறனாளிகள், ஆதரவற்றோர் , தாழ்த்தப்பட்ட மற்றும் பட்டியலினத்தை சேர்ந்தோருக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை 21 முதல் 30 வரை என டி‌என்‌பி‌எஸ்‌சி நிர்ணயித்துள்ளது.


Leave a Reply