--- --:--:-- --

எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் காலமானார்

Meeran

பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது வென்றவருமான தோப்பில் முகம்மது மீரான் காலமானார்; அவருக்கு வயது 75.

 

புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான தோப்பில் முகம்மது மீரான், கடந்த 1944 செப்டம்பர் 26ஆம் தேதி, கன்னியாகுமரி மாவட்டம் தேங்காப்பட்டினத்தில் பிறந்தார். இவர் துறைமுகம், ஒரு கடலோர கிராமத்தின் கதை, கூனன் தோப்பு, குடியேற்றம் உள்ளிட்ட புதினங்கள், 6 சிறுகதைகள், பல மொழிபெயர்ப்பு நூல்களை எழுதியுள்ளார்.

 

இவர் எழுதிய சாய்வு நாற்காலி என்ற நாவலுக்காக 1997 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருதை பெற்றுள்ளார். இந்த நிலையில், கடந்த சில நாட்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த அவர், நெல்லையில் காலமானார்.


அவரது உடல், நெல்லை வீரபாகு நகரில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இன்று மாலை நெல்லை பேட்டையில் உள்ள பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்படும் என்று, குடும்பத்தினர் தெரிவித்தனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon