மகாராஷ்டிராவில், நக்சலைட்டுகள் நடத்திய வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் உயிரிழந்தனர்.
கட்சிரோலி என்ற பகுதியில் பாதுகாப்பு படையினர் ஒரு வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர். அவர்களது வாகனத்தை குறி வைத்து நக்சலைட்டுகள் வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தினர்.
இதில், வாகனத்தில் சென்றவர்களில் 16 வீரர்கள் உடல் சிதறி பலியானதாக, முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவில் நக்சலைட்டுகள் நடத்திய தாக்குதலுக்கு பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தாக்குதலில் ஈடுபட்டவர்களை மன்னிக்க மாட்டோம் என்று கூறியுள்ள அவர், உயிரிழந்த 16 வீரர்களின் குடும்பங்களுக்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மேலும் செய்திகள் :
தேர்தல் பாதுகாப்பு: திருவாடானையில் மத்திய பாதுகாப்புப் படையினரின் அதிரடி கொடி அணிவகுப்பு!
சட்டமன்ற தேர்தல் எதிரொலி - தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்
நெருக்கடி கொடுப்பது பா.ஜ.க-வின் பழக்கம் - த.வெ.க நிர்வாகி நாஞ்சில் சம்பத் ஓபன் டாக்
தி.மு.க சொன்ன தொகுதி எண்ணிக்கையில் ஏற்பு இல்லை - பெ.சண்முகம் பேட்டி
அ.தி.மு.கவுக்காக நீங்க ஏன் நீலிக்கண்ணீர் வடிக்கிறீங்க? ஸ்டாலினை தாக்கிய அண்ணாமலை
எரிவாயு தட்டுப்பாட்டை சமாளிக்க மத்திய அரசு நடவடிக்கை..!






