பல்லடம் அருகே, மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் தேர்தலை புறக்கணித்தனர். இதனால் வாக்குச்சாவடி வெறிச்சோடி காணப்பட்டது.
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே மின் மயானம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தங்களது கோரிக்கையை ஏற்க வலியுறுத்தியும், அரசுக்கு உணர்த்தவும், மக்களவை தேர்தலை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதேபோல், தேனி மாவட்டம் போடி அருகே மலைக்கிராமத்தில் தேர்தலை புறக்கணித்து கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குரங்கணி அருகே தென்றல் என்ற மலைக்கிராமத்தில் 400 வாக்காளர்கள் வாக்களிக்காமல் புறக்கணித்தனர்.
மேலும் செய்திகள் :
"ஸ்டாலின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை" - ராஜேந்திர பாலாஜி
விஜய்க்கு ரஜினி ஒரு உதாரணம் - அண்ணாமலை
ஆட்சியில் பங்கு தமிழ்நாட்டிற்கு ஒத்துவராது - முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்
"சுவமித்வா " திட்டம் தமிழகத்தில் செயல்படுத்தவில்லை - டி.ஆர்.பாலு கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்
இப்படி செய்தால் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க எச்சரிக்கை
மத்திய அரசு நிதியில் உருவானதே தோழி விடுதி - அண்ணாமலை






