மது போதையில் தகராறில் ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மது போதையில் தகராறு ஈடுபட்ட 3 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டனர். ஏழாயிரம் பண்ணையில் மெய்ன் பஜாரில் உள்ள கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா, புகையிலையை கேட்டு சிப்பிபாறையை சேர்ந்த ராணுவ வீரர்களான சங்கத்துரை, ரமேஷ்குமார் மற்றும் மாரிசாமி ஆகியோர் மது போதையில் தகராறில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பான புகாரின் பேரில் 3 பேரை கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




