தந்தை மற்றும் மகனை தாக்கிய இளைஞர்கள்!
சென்னையை அடுத்த எருக்கஞ்சேரியில் தந்தை மற்றும் மகன் ஆகிய 9 பேரை போலீசார் கைது செய்தனர். கடந்த 29 ஆம் தேதி எருக்கஞ்சேரி அண்ணாசாலையில் கட்டுமான பணிகள் நிறைவடையாத கட்டிடத்தில் கூடிய மர்மநபர்கள் கஞ்சா மற்றும் மது போதையில் அப்பகுதியை சேர்ந்த பெண்ணிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்டித்த ரவி மற்றும் அவரது தம்பியை கடுமையாகத் தாக்கிய அந்த கும்பல் அங்கு நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது சரமாரியாக கற்களை வீசி சேதப்படுத்தினர்.இந்த தாக்குதலில் காயமடைந்த ரவி மற்றும் அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அங்கு பதிவாகியுள்ள சிசிடிவி காட்சிகள் மூலம் 9 பேரை கைது செய்த போலீசார் பின் அவர்களை புழல் சிறையில் அடைத்தனர்.







