தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது நடைபெறும்..?
தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது என்பதில் அரசின் நிலைப்பாடு நாளைக்குள் தெரிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரொனா பரவல் அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் பிளஸ் டூ தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு கொண்டே வருகின்றன. இந்த நிலையில் தமிழகத்தில் 12-ஆம் வகுப்பு தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எப்போது என்பதில் அரசின் நிலைப்பாடு நாளைக்குள் தெரிவிக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.







