திமுக என்ன விதைத்ததோ அதுதான் முளைக்கும்: கே.டி. ராஜேந்திர பாலாஜி பேச்சு
திமுக மக்களுக்குத் துரோகத்தை விதைத்ததால் அது தற்போது துரோகங்களாக வளர்ந்திருக்கிறது. அதிமுக கூட்டணி 210 தொகுதிகளில் வெற்றி பெற்று எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதல்வராவார்.
இருப்பவரிடத்தில் வாங்கி இல்லாதவருக்குக் கொடுப்பதே எடப்பாடி பழனிசாமியின் கொள்கை என கே.டி. ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.





