சத்து மாத்திரை சாப்பிட்டதால் மாணவிகளுக்கு வாந்தி, மயக்கம்..!
சேலம் மாவட்டம் ஆத்தூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் சத்து மாத்திரை சாப்பிட்டதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மாணவிகள் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
35 மாணவிகள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில் சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவிகளுக்கு மட்டுமே வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.





