ஆசிரியர்களுக்குக் கண் எரிச்சல், தலைவலி ஏற்படுவதாக புகார்..!
சிபிஎஸ்இ 12-ஆம் வகுப்பு விடைத்தாள்களைத் திருத்த அறிமுகப்படுத்தப்பட்ட OSM (On-Screen Marking) முறை, ஆசிரியர்களுக்கு உடல்நல ரீதியாகவும் தொழில்நுட்ப ரீதியாகவும் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.தொடர்ச்சியாகக் கணினித் திரையைப் பார்த்து விடைத்தாள்களைத் திருத்துவதால், ஆசிரியர்களுக்குக் கண் எரிச்சல், தலைவலி மற்றும் கடுமையான சோர்வு (Screen Fatigue) ஏற்படுவதாகப் புகார்கள் எழுந்துள்ளன.
மதிப்பீட்டுப் பணிக்கு முன்பாகவே டிஜிட்டல் நலம் (Digital Well-being) குறித்து விழிப்புணர்வு வழங்கப்பட்டாலும், அதிகப்படியான விடைத்தாள்களைத் திரையில் பார்ப்பது ஆசிரியர்களுக்குப் பெரும் சுமையாக மாறியுள்ளது





