வேலூர் இப்ராஹிம் கடலூர் சிறையில் அடைப்பு..!
பா.ஜ.க சிறுபான்மை பிரிவு தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம், கடலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிறுநீரக அறுவை சிகிச்சையில் முறைகேடு நடப்பதாகக் கூறி அவதூறு பரப்பி, ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைய முயன்ற வேலூர் இப்ராஹிம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இப்ராஹிமை கைதுசெய்த போலீசார், ஜார்ஜ் டவுன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடலூர் சிறையில் அடைத்தனர்.






