ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுமிகள்..!
உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷில் ஆற்றில் அடித்து செல்லப்பட்ட 2 சிறுமிகளை ராணுவ வீரர்கள் காப்பாற்றி மெய்சிலிர்க்க வைக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. சாகசப் பயணத்தில் ஈடுபட்டிருந்த சிறுமிகள் தங்கள் படகுகளில் இருந்து தவறி விழுந்ததாக தெரிகிறது.
அவர்கள் உயிர் காக்கும் உடை அணிந்திருந்ததால் நீரில் மூழ்கவில்லை. அதே நேரத்தில் ஆற்றின் நீரின் வேகம் அதிகமாக இருந்ததால் அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டனர்.அவர்களை மீட்கும் முயற்சி தோல்வியடைந்த நிலையில் கரையில் நின்றிருந்த ராணுவ வீரர்கள் இருவர் துணிச்சலுடன் ஆற்றில் குதித்து இரண்டு சிறுமிகளை மீட்டனர்.





