மது போதையில் அரை நிர்வாணமாக பேருந்தை வழிமறித்த இரண்டு சிறுவர்கள்..!
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகே 100 அடி சாலையில் மது போதையில் ஈடுபட்ட இரு சிறுவர்களுக்கு தர்ம அடி கொடுத்தனர் மக்கள். வாகனங்களை செல்ல விடாமல் தடுத்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மக்கள் எடுத்துக் கூறும் வழி விடாத சிறுவனை பிடிக்க வந்த போலீசாரையும் மக்களையும் ஆபாசமாக பேசி தகராறில் ஈடுபட்டான். உதவி ஆய்வாளர் ஒருவர் சமாதானம் பேச வந்த பொழுது மது போதை தலைக்கேறிய சிறுவன் உடலை கழற்றி நிர்வானமாக போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டான்.
ஆத்திரமடைந்த பொதுமக்கள் அவனைப் பிடித்து தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.





