மகளை ஆடிப் பண்டிகைக்கு அழைக்க சென்ற போது நேர்ந்த சோகம்..!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே இருசக்கர வாகனம் மீது டிராக்டர் மோதிய விபத்தில் தாய் மற்றும் மகள் உயிரிழந்தனர். சின்னார் பாளையம் பகுதியை சேர்ந்த தவமணி. தனது மூத்த மகள் உடன் இளைய மகளை ஆடி பண்டிகைக்கு அழைப்பதற்காக அவரது வீட்டிற்கு சென்றார்.
பின்னர் இருவரும் வீடு திரும்பி கொண்டிருந்த நிலையில் வந்த பொழுது கரும்பு பாரம் ஏற்றி வந்த டிராக்டர் இருசக்கர வாகனம் மீது மோதியதில் படுகாயம் அடைந்து தவமணி மற்றும் இந்து உயிரிழந்தனர்.





