படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவிக்கு நிகழ்ந்த சோகம்..!
ராணிப்பேட்டை மாவட்டம் திமிரி அருகே கூட்ட நெரிசல் காரணமாக பேருந்து படிக்கட்டில் பயணம் செய்த பள்ளி மாணவி கீழே விழுந்த படுகாயம் அடைந்தார். பிரியா என்கிற மாணவி திமிரியில் 12 ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
பள்ளி செல்வதற்காக நூற்றுக்கும் மேற்பட்டோர் பயணித்த அரசு பேருந்தில் படிக்கட்டு நின்றபடி அவர் பயணித்துள்ளார். அப்பொழுது திடீரென தவறி விழுந்ததில் இடது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.





