--- --:--:-- --

குற்றவாளிகளை எளிதில் கண்டுபிடிக்க ட்ரேக்கர் கருவி

15

சிவகங்கை மாவட்டத்தில் கொலை, கொள்ளை சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை அலைபேசி டவர் மூலம் கண்டறியும் அதிநவீன ‘ட்ரேக்கர்’கருவி போலீசாரின் விசாரணைக்கு உறுதுணையாக இருந்து வருகிறது.

 

மேலும் மாவட்ட அளவில் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடைபெற்றால், அதில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிய முதலில் போலீசார் குழு அமைத்து தேடி வந்தனர். மேலும் குற்றவாளிகளை கண்டறிவதில் நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் நோக்கில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ரோஹித்நாதன் ராஜகோபால் ரூ.4 லட்சத்தில் அதிநவீன ‘ட்ரேக்கர்’ கருவியை வாங்கியுள்ளார்.

 

இக்கருவி மூலம் கொலை, கொள்ளை சம்பவங்கள் நடக்கும் இடத்தில் வைத்து, சம்பவம் நடந்த நேரத்தை கணக்கிட்டு, அந்நேரங்களில் இப்பகுதியில் அலைபேசியில் பேசியவர் விபரங்களை, டவர் மூலம் கண்டறிந்து, அதன் மூலம் கிடைக்கும் அறிக்கையை வைத்து, குற்றவாளிகளை எளிதில் கைது செய்யலாம் என தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Right Menu Icon