குரூப் 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகளை வெளியிட்ட டி.என்.பி.எஸ்.சி..!
குரூப் 2 ஏ முதன்மை தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. தேர்வு முடிந்து 56 நாட்கள் கடந்த நிலையில், இதன் முடிவுகள் வெளியாகி இருக்கிறது.
மேலும், தொடர்ந்து 12-வது முறையாக தேர்வாணையத்தின் தெரிவு அட்டவணையில் குறிப்பிட்ட மாதத்தில், தவறாமல் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளதாக டி.என்.பி.எஸ்.சி தெரிவித்துள்ளது.





