திருப்பூர்: நாளை முதல் மீண்டும் சிறப்பு பேருந்துகள்!
திருப்பூரில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு, மக்கள் சொந்த ஊர் செல்ல ஏதுவாக கடந்த 10ம் தேதி முதல் 13ம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டன.
தற்போது பொங்கலுக்கு சொந்த மாவட்டங்களுக்கு சென்றவர்கள் திரும்புவதற்கு வசதியாக, நாளை முதல் (17ஆம் தேதி) இரவு முதல், 19ஆம் தேதி வரை, சிறப்பு பஸ்கள் மீண்டும் இயக்கப்பட உள்ளன. இதற்கான ஏற்பாடுகளை, திருப்பூர் மண்டலப் போக்குவர்த்து கழகம் செய்து வருகிறது.






