திருச்செந்தூர் சூரசம்ஹாரம்.. அலைகடலென திரண்ட பக்தர்கள்..!
கந்த சஷ்டி விரதம் தொடங்கிய நிலையில், முருகனின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் முருகன் கோயிலில் இன்று சூரசம்ஹாரம் விழா கோலாகலமாக நடைபெறுகிறது. கடந்த 22-ஆம் தேதி கந்த சஷ்டி விழா தொடங்கியது முதலே, கோயிலிலேயே தங்கியிருந்து ஏராளமான பக்தர்கள் விரதம் இருந்து வருகின்றனர்.
இதனால், திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் அரோகரா முழக்கம் எதிரொலிக்க பக்தர்கள் பக்திப் பரவசத்தில் திளைத்துள்ளனர். திருச்செந்தூரில் போர் புரிந்து சூரபத்மனை வதம் செய்யும் நிகழ்வே சூரசம்ஹாரம் என்று சொல்லப்படுகிறது. இது ஆண்டுதோறும் திருச்செந்தூர் கோயில் கடல் அருகே நடைபெறும்.





