நகைப்பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள்..!
வேலூரில் நகை பையை பறித்துக் கொண்டு தப்பிய இளைஞர்கள் இரண்டு பேரை போலீசார் தேடி வருகின்றனர். வேலூர் துறை பாண்டியை சேர்ந்த லோகேஷ் என்பவர் சுமார் 15 சவரன் நகைகளை வங்கியில் அடமானம் வைப்பதற்காக எடுத்துச் சென்றார்.
அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு பேர் லோகேஷ் வைத்திருந்த நகை பையை பறித்து சென்றனர். அவர்கள் சென்று இருசக்கர வாகனம் விபத்தில் சிக்கிய பொழுது வாகனத்தை அப்படியே போட்டுவிட்டு இருவரும் தப்பிய நிலையில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.





