பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞர்..!
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் சாலையில் சென்ற பெண்களை புகைப்படம் எடுத்த இளைஞரை கல்லூரி மாணவர்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
மாணிக்காபுரம் பகுதியை சேர்ந்த அகமது மொய்தீன் என்பவர் சாலையில் சென்ற பெண்கள், கல்லூரி மாணவிகளை செல்போனில் புகைப்படம் மற்றும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இவரை பிடித்த கல்லூரி மாணவர்கள் பல்லடம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
அவர் மேற்கொண்ட விசாரணையில் கடந்த சில மாதங்களாக பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளை புகைப்படம் எடுப்பது தெரிய வந்தது.






