வெயிலில் நடந்து சென்ற தொழிலாளி.. சுருண்டு விழுந்து பலியான அதிர்ச்சி..!
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சிங்கிகுளம் கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளி ராஜா என்பவர் வெயிலில் மயங்கி விழுந்து உயிரிழந்தார்.
காடுவெட்டி கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டிற்கு நடந்து சென்ற பொழுது வலிப்பு ஏற்பட்டதையடுத்து சிங்கிகுளம் ஆரம்ப சுகாதார மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.






