ட்விட்டர் பக்கத்தில் ஷிக்கர் தவான் வெளியிட்டுள்ள கவிதை!
உலக கோப்பை தொடரிலிருந்து தற்காலிமாக விலகி இருப்பது குறித்து ஷிக்கர் தவான் டுவிட் செய்துள்ளார். ஆஸ்த்ரேலியாவிற்கு எதிராக லீக் ஆட்டத்தின் போது இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஷிக்கர் தவானுக்கு கையில் காயம் ஏற்பட்டது.
இதனால் அவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இருந்து தற்காலிகமாகவிலகியுள்ளார். இந்நிலையில் இது குறித்து ஷிக்கர் தவான் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.அதில் காயம் ஏற்பட்டபோது எடுக்கபட்ட புகைப்படத்துடன் சிறகுகளுக்கு பதிலாக மனவுறுதியால் நாம் பறக்கிறோம் அதனை கத்தரித்து விட முடியுமா என உருது மொழி கவிஞர் ரகட் இந்தூரியின் கவிதையை பதிவிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




