கறிக்கடை உரிமையாளரை வெட்டி கொலை செய்துவிட்டு போலீஸிடம் சரணடைந்த நபர்..!
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே கறிக்கடை உரிமையாளரை அரிவாளால் வெட்டிக் கொன்றுவிட்டு காவல் நிலையத்தில் சரணடைந்தவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். ஆறுமுகநேரியை சேர்ந்த பா.லிங்கம் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த லிங்கராஜ் இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டு முன்பாக இருந்ததாக கூறப்படுகிறது.
கடைவீதிக்குச் சென்றிருந்த அவரை வழிமறித்த லிங்கராஜ் தான் வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.







