அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது..!
அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவு திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நார்வே தலைநகர் ஆஸ்லோவில் அமைதிக்கான நோபல் பரிசை தேர்வுக் குழு அறிவித்தது. உலகம் முழுவதும் வறுமையில் வாடுபவர்களுக்கு உணவு அளிப்பதற்காக அமைதிக்கான நோபல் பரிசு உலக உணவுத்திட்ட அமைப்புக்கு அறிவிக்கப்பட்டது.
கடந்த 58 ஆண்டுகளாக சேவையாற்றி வரும் உலக உணவுத் திட்ட அமைப்பு போர் நடைபெற்ற பகுதிகளில் மக்களுக்கான உணவு தேவைகளை பூர்த்தி செய்வதில் முக்கிய பங்காற்றி வருகிறது.







