உயிரிழந்த நாய்க்குட்டியை 2 நாட்களாக வாயில் கவ்வித்திரியும் தாய்
மதுரையில் உயிரிழந்த நாய் குட்டியை அதன் தாய் வாயில் கவ்விக் கொண்டு இரண்டு நாட்களாக சுற்றிவருவது காண்போரை கலங்க செய்துள்ளது. மதுரையில் ஒரு பகுதியில் இரண்டு நாட்கள் முன்னர் குட்டி நாய் ஒன்று விபத்தில் சிக்கி உயிரிழந்தது.
ஆனால் அதனை அறியாத தாய் நாய் தனது குட்டியை எழுப்ப முயற்சித்தது. பின்னர் குட்டி நாயை தாய் தனது வாயில் கவ்விக்கொண்டு சுற்றி திரிகிறது. இரண்டு நாட்களாக இதனை கண்காணித்து வரும் சிலர் தாயின் பாசத்தை எண்ணி கலங்குகின்றனர்.





