குழந்தைக்கு செக்யூரிட்டி சிகிச்சை அளித்த விவகாரம்.. விசாரணையில் திடுக்கிடும் தகவல்..!
சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் 4 வயது சிறுவனுக்கு காவலாளி சிகிச்சை அளித்ததாக கூறப்படும் நிலையில் அதனை மருத்துவமனை டீன் சிசிடிவி ஆதாரங்களோடு மறுத்துள்ளார்.
செக்யூரிட்டி மருத்துவ சிகிச்சை அளிக்க முயன்றதாக பெற்றோர் குற்றம் சாட்டியிருந்தனர். சிறுவனுக்கு மருத்துவர்கள் தான் சிகிச்சை அளித்தனர் என டீன் விளக்கம் அளித்துள்ளார்.
சிறுவனின் சட்டையை கழட்டும் பணியில் செக்யூரிட்டிகள் ஈடுபட்டனர். சிறுவனின் சட்டையை கழட்டுவதற்கு பெற்றோர் ஒத்துழைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.






