மனைவியையும், மாமியாரையும் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த நபர்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் மணளூர் பேட்டை அருகே மனைவியையும் மாமியாரையும் கடப்பாரையால் அடித்துக் கொலை செய்த நபரை போலீசார் தேடி வருகின்றனர். குடிப்பழக்கம் கொண்ட முருகன் மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
கணவருடன் கோபித்துக்கொண்டு தாய் வீட்டிற்கு சென்றார் மனைவி, குடிபோதையில் சென்ற முருகன் மனைவியை அனுப்புமாறும் இல்லையெனில் தான் வாங்கிக் கொடுத்த நகைகளை திருப்பித் தருமாறு தகராறு செய்துள்ளார்.
அவரை அமைதிப்படுத்தி தாயும் மகளும் வீட்டிலேயே தங்க வைத்துள்ளனர். குடிபோதையில் அவரிடம் இருந்த முருகன் நள்ளிரவில் இருவரையும் அடித்து கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது.







