சாலை விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்த விவகாரம்.. உறவினர்கள் சாலை மறியல்..!
திண்டுக்கல் மாவட்டம் அருகே சாலை விபத்தில் தூய்மை பணியாளர் உயிரிழந்தது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி உறவினர்கள் சாலை மறியல் கொல்லம் பட்டி கிராமத்தை சேர்ந்த வடிவேல் என்பவர் வத்தலகுண்டு பேரூராட்சியில் தற்காலிக தூய்மை பணியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில் உறவினர்கள் வீட்டுக்கு சென்று விட்டு வீடு திரும்பும் சமயத்தில் விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதனை கண்டித்து விபத்து ஏற்படுத்தியவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி வத்தலகுண்டு பெரியகுளம் சாலையில் உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.





