சென்னையில் நடந்த பயங்கரம்.. ஏரியில் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை..!
தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் கணவருக்கு தெரியாமல் இருக்க வீட்டில் பிரசவித்தவுடன் ஏரியில் குழந்தையை வீசியதாக தகவல் வெளியாகி உள்ளது. வேளச்சேரி சசி நகர் அருகே பிறந்த சில நாட்களை ஆன பச்சிளம் குழந்தை ஏரியில் நேற்று சடலமாக மீட்கப்பட்டது.
பச்சிளம் பெண் குழந்தையை ஏரியில் வீசியது யார் என்று விசாரித்ததில் பெற்ற தாய் சங்கீதாவை குழந்தையை கொன்றது தெரிய வந்தது. எனவே தவறான உறவால் பிறந்த குழந்தை என்பதால் கணவருக்கு தெரியாமல் இருக்க வீட்டில் பிரசவித்த உடன் ஏரியில் வீசியதாக தகவல் வெளியாகியுள்ளது.
குழந்தை யாருடையது என கண்டறிய டிஎன்ஏ பரிசோதனை செய்ய போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.






