அண்ணனை தள்ளி கொல்ல முயன்ற தம்பி..!
ராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டினம் அருகே பழனிவலசு கிராமத்தை சேர்ந்தவர் தங்கராஜ். இவர் இறந்து விட சொத்தை பிரிப்பதில் மகன்களான ரத்தினசாமிக்கும், துரைசிங்கத்திற்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
ராமநாதபுரம் நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் இருவருக்கும் அவ்வப்போது தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்த நிலையில் கட்டடத்தின் மேல் நின்று வேலை பார்த்துக் கொண்டிருந்த அண்ணன் ரத்தினசாமியை தம்பிதுரை சிங்கம் கீழே தள்ளி கொல்லவும் முயன்றார்.
இதனால் காயமடைந்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.






