ஆபீஸில் தனியாக இருந்த பெண் பொறியாளர்..அத்துமீறிய பொறியாளர்..!
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் துணை மின் நிலை அலுவலகத்தில் வைத்து பெண் ஊழியரிடம் தவறாக நடக்க முயன்ற புகாரில் மதுரையை சேர்ந்த இளநிலை பொறியாளர் கண்ணன் கைது செய்யப்பட்டார்.
அலுவலகத்தில் தனியாக இருந்த பெண்ணை தவறான எண்ணத்துடன் அந்த பெண்ணை பொறியாளர் கண்ணன் கட்டிப்பிடித்ததாக கூறப்படுகிறது. அவரிடம் இருந்து விடுபட்டு அலறி அடித்தபடி வெளியே வந்த அந்த பெண் இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.






