நூலகம் முன்பு திருமணம் செய்து கொண்ட ஜோடி..!
புதுச்சேரியில் வித்தியாசமான முறையில் திருமணம் செய்து கொண்ட காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. விருகம்பாக்கத்தை சேர்ந்த நபர் திரைப்பட உதவி இயக்குனராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் செவிலியரான சுஜாதா என்பவரை 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார். இரு வீட்டாரின் சம்மதத்துடன் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
தனது வீட்டில் அமைத்துள்ள நூலகம் முன்பு இருவரும் பௌத்த முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இருவரின் வித்தியாசமான முயற்சிக்கு பலரும் பாராட்டை தெரிவித்துள்ளனர்.






