சாலையில் தரிக்கட்டு ஓடிய கார்.. படுகாயம் அடைந்த 2 பேர்..!
சென்னை அம்பத்தூர் அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் மீதும் மோதி விபத்திற்கு உள்ளானது. இதில் காரை ஓட்டியவரின் மனைவி உட்பட இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர்.
கள்ளிகுப்பத்தைச் சேர்ந்த சந்திரன் தனது மனைவியுடன் காரில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சைக்கிளில் வந்த மாநகராட்சி ஊழியர் மீது மோதியது. இதில் சைக்கிளில் வந்த நபருக்கு இடது கை தோள்பட்டை எலும்பு முறிந்தது. விபத்து குறித்து அம்பத்தூர் போக்குவரத்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.





