கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்த கார்..!
மேல்மருவத்தூர் எடுத்த ஏரப்பாக்கம் பகுதியைச் சேர்ந்த இளவரசன் என்பவர் தனது குடும்பத்துடன் காரில் திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே சென்று கொண்டிருந்தார். அப்பொழுது கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் கவிழ்ந்து விபத்திற்கு உள்ளானது.
இளவரசன் அவரது மூன்று வயது மகனும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த மனைவியும் மகளும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.






