விளையாடிக் கொண்டிருந்த பொழுது நடந்த விபரீதம்..!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அருகே வேலைகூட்டையூரில் குடிசை மாற்று வாரியம் சார்பில் வீடுகட்ட தோண்டப்பட்ட பள்ளத்தில் மழை நீர் தேங்கியிருந்த நிலையில் கால் இடறி விழுந்த சிறுவன் நீரில் மூழ்கி உயிரிழந்ததையடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார்த்திக் என்ற கூலித்தொழிலாளியின் மகன் காலாண்டு விடுமுறையின் இறுதி நாள் என்பதால் வீட்டிற்கு அருகே நண்பருடன் விளையாடிக் கொண்டிருந்த பொழுது தவறி பள்ளத்தில் விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்ததாக கூறப்படுகிறது.





