இடிந்த LeT கட்டடத்தில் தீவிரவாதிகள் தொழுகை
ஆபரேஷன் சிந்தூரில் இந்தியா தரைமட்டமாக்கிய லஷ்கர்-இ-தொய்பா தலைமையைகத்தின் வீடியோ வெளியாகியுள்ளது. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாக்., கில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது.
இதில் LeT, JeM உள்ளிட்ட அமைப்புகளின் கட்டடங்கள் தரைமட்டமாகின. இந்நிலையில், தாக்குதலில் தரைமட்டமான முரித்கேவில் உள்ள LeT தலைமையகத்தில் 30 பேர் தொழுகை நடத்தியது தெரியவந்துள்ளது.






