பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை..!
நாகப்பட்டினம் அருகே பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் தற்காலிக ஆசிரியருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
சீர்காழியை சேர்ந்த மூவேந்தன் என்பவன் அதே பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியாற்றியபோது 2 பள்ளி சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதி தமிழரசி மூவேந்தனுக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.







