தமிழகத்தில் சின்னத் திரைகளுக்கான இன்று முதல் தொடங்கும்..!
தமிழகத்தில் சின்னத்திரை தொடர்களுக்கான படபிடிப்பு இன்று முதல் தொடங்கும் என்று பெப்சி அமைப்பின் தலைவர் ஆர்கே செல்வமணி தெரிவித்துள்ளார்.
பொது முடக்கம் காரணமாக 90 நாட்கள் நிறுத்தி வைக்கப்பட்ட சின்னத்திரை படப்பிடிப்புகள் கடந்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கின. சில நாட்கள் நடைபெற்ற படப்பிடிப்பு முழு முடக்கம் அமல்படுத்தப்பட்டதால் தடை படுத்தப்பட்டது.
இந்த நிலையில் சென்னையில் முழு முடக்கும் அமலுக்கு வந்த நிலையில் நாளை முதல் சின்னத்திரை தொடருக்கான படிப்பு தொடரும் என்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர் கே செல்வமணி தெரிவித்துள்ளார். இதனால் விரைவில் சின்னத்திரை தொடர்களுக்கான புதிய அத்தியாயங்கள் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.







