தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டதன் பின்னணியில் தமிழக அரசு உள்ளது: பூச்சி முருகன் குற்றச்சாட்டு
தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் நிறுத்தப்பட்டதன் பின்னணியில் தமிழக அரசு இருப்பதாக விஷால் அணியை சேர்ந்த பூச்சி முருகன் குற்றம் சாட்டியுள்ளார். பாக்கியராஜ் தலைமையிலான அணிக்கு சாதகமாக தமிழக அரசு செயல்பட்டுவருவதாக குறிப்பிட்டார்.அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்படவில்லை எனவும்கூறினார். எனவே தான் சங்கங்கள் குறித்த சட்டம் தவறாக பயன்படுத்தப்பட்டு தேர்தல் நிறுத்தபட்டுள்ளதாக பூச்சி முருகன் குற்றம் சாட்டினார்.





