தமிழக மீனவர்களை விடுவிக்க கோரி முதலமைச்சர் கடிதம்..!
தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி முதலமைச்சர் ஸ்டாலின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில் மீன்பிடி படகுகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த ஆண்டில் மட்டும் 225 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.





