முதல்வரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக எஸ்.வி. சேகர் மீது புகார்..!
தமிழக முதலமைச்சரின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாக பாஜகவை சேர்ந்த எஸ் வி சேகர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜ ரத்தினம் என்பவர் அளித்த புகாரில் முதலமைச்சருக்கு பதிலளிக்கும் வகையில் சமூக வலைதளங்களில் எஸ் வி சேகர் வீடியோ வெளியீடு இருப்பதை சுட்டிக் காட்டியுள்ளார்.
அந்த வீடியோவில் தேசிய கொடியை அவமதிக்கும் வகையிலும் முதலமைச்சர் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையிலும் எஸ் வி சேகர் பேசி இருப்பதாக புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.







