ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஸ்டாலின் மனு அளித்துள்ளார்..!
தமிழக முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் திமுக தலைவர் மு க ஸ்டாலின் மனு அளித்துள்ளார். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின் விசாரணை நடைபெறுவதை ஆளுநர் உறுதி செய்ய வேண்டும் என்றார்.
அதிமுக ஆட்சியில் அம்மையார் ஜெயலலிதாவை மறைவுக்கு பிறகு எடப்பாடி பழனிசாமி இருக்கக்கூடிய ஆட்சியில் நான்கு வருடங்களில் அனைத்து துறைகளிலும் ஊழல் உள்ளது எனவும் எனவே இதுகுறித்து திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் லஞ்ச ஒழிப்புத் துறையிடம் பல்வேறு புகார்கள் அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.







