காவல் கண்காணிப்பாளர் ஷூவில் மறைந்திருந்து கடித்த பாம்பு..!
மத்திய பிரதேச மாநிலம் அண்ணா நகரில் காவல்துறை கண்காணிப்பாளர் ஒருவரை ஷூவில் மறைந்திருந்த பாம்பு கடித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. அங்கு மயங்காவஸ்தி என்பவர் காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
பணிக்கு செல்வதற்காக தன்னுடைய ஷுவை அணிய முயன்ற போது அதில் மறைந்திருந்த பாம்பு கடித்ததை அடுத்து உடனடியாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்குப்பின் அவர் நலமுடன் இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.







