குடிநீர் தொட்டியை சுத்தம் செய்த போது அதிர்ச்சி.. கையில் கிடைத்த எலும்பு துண்டு..!
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே மேல்நிலை குடிநீர் நீர் தேக்க தொட்டியில் எலும்பு துண்டுகள் கிடந்ததாக புகார் அளிந்துள்ளது. குடிநீர் சப்ளை செய்யப்படும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பல நாட்களாக மூடப்படாமல் இருந்துள்ளது.
வெல்லமடை ஊராட்சி சார்பாக தொட்டியை சுத்தம் செய்யும் பணி மேற்கொண்டதில் எலும்பு துண்டுகள் கடந்ததாக கூறப்படுகிறது. சம்பவ இடத்திற்கு வந்த வட்டார வளர்ச்சி அலுவலர் ஊராட்சி தலைவர் நேரில் வந்து விசாரணை நடத்தினர்.





