ஆவின் பாலில் ஈ இருந்ததால் அதிர்ச்சி..!
மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து விற்கப்பட்ட பாலில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர். மதுரையிலிருந்து நாளொன்றுக்கு 5 லட்சம் பால் பாக்கெட் உற்பத்தி செய்யப்பட்டு 40 வழித்தடங்கள் விநியோகம் செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் புதுக்கோட்டை பகுதியில் உள்ள ஆவின் பாலகத்தில் விற்பனை செய்யப்பட்ட பால் பாக்கெட்டில் ஈ இருந்ததால் நுகர்வோர் அதிர்ச்சியடைந்தனர்.
இது தொடர்பான காணொளி வெளியான நிலையில் ஆவின் அதிகாரிகள் பால் பாக்கெட்டை திரும்பப் பெற்றதோடு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பாக்கெட் செய்யும் பொழுது தவறு நடந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் இனி இதுபோன்று தவறு நடைபெறாது என்று விளக்கம் அளித்துள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





