6 ஆண்டுகளாக செதுக்கப்பட்ட சிவன் சிலை..!
கேரள மாநிலம் திருவனந்தபுரம் கடற்கரையில் மிகப்பெரிய சிவபெருமானின் சிலை வைக்கப்பட்டுள்ளது.பொதுமக்கள் இதனை பெரும் திரளாக பார்வையிட்டு மகிழ்கின்றனர்.
அங்குள்ள கோவளம் கடற்கரையை ஒட்டியுள்ள ஆலமர சிவன்கோவிலில் இந்த சிவபெருமானின் பிரம்மாண்டமான சிலை வைக்கப்பட்டுள்ளது. கங்காதரன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த சிற்பத்தை செதுக்கும் பணி 6 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்டு 2020ஆம் ஆண்டு இறுதியில் நிறைவு பெற்றுள்ளது.






