மதுரையில் விஜய் ரசிகர்கள் ஒட்டிய பரபரப்பு போஸ்டர்..!
மதுரையில் தமிழக முதல்வரின் கவனத்திற்கு என்ற வாசகங்களுடன் நடிகர் விஜய்யின் ரசிகர்கள் பல்வேறு இடங்களில் போஸ்டர்களை ஒட்டியுள்ளனர். திரையரங்குகளை திறக்க கோரிக்கை வைக்கும் விதமாக கொரொனா மறந்தாச்சு, இயல்பு நிலை வந்தாச்சு, திரையரங்கம் என்னாச்சு என்று சில வாசகங்கள் அந்த போஸ்டரில் இடம் பெற்றுள்ளன.
நடிகர் விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் அனைத்து பணிகளும் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ள நிலையில் ரசிகர்கள் இந்த போஸ்டர் மூலம் திரையரங்குகளை திறக்க கோரிக்கை வைத்துள்ளனர்.






