மாணவி ஸ்ரீமதியுடன் படித்த இரண்டு மாணவிகள் நீதிமன்றத்தில் அளித்த ரகசிய வாக்குமூலம்..!
கள்ளக்குறிச்சி மாவட்டம் கனியாமூர் பள்ளி மாணவி ஸ்ரீமதியுடன் படித்த இரண்டு மாணவிகள் நீதிமன்றத்தில் ஆஜராகி ரகசிய வாக்குமூலம் அளித்துள்ளனர். ஸ்ரீமதி மரணம் தொடர்பாக அவரது உறவினர்கள், பள்ளி நிர்வாகத்தினர் ஆசிரியர்களிடம் சிபிசிஐடி விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் திங்கள்கிழமை என்ற ஸ்ரீமதி தோழிகள் இருவர் விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி புஷ்பராணி முன்னிலையில் ஆஜராகி இரண்டு மணி நேரம் வாக்குமூலம் அளித்தனர். பரிசோதனைகள் குறித்து புதுச்சேரி சென்று மருத்துவ குழு நீதிமன்றத்தில் ஆய்வு அறிக்கையை தாக்கல் செய்தது.





