ரயில் பயணிகள் அலறல்.. பட்டாக்கத்தியுடன் மீண்டும் கல்லூரி மாணவர்கள் அட்டகாசம்..!
திருவள்ளூர் அருகே மின்சார ரயில் படிக்கட்டில் தொங்கிய படியும். பட்டாக்கத்திகளை நடைமேடையில் தீட்டியப்படியும் சென்ற கல்லூரி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கல்லூரி மாணவர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்ட வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் ரயில்வே பாதுகாப்பு படை காவலர்கள் புகாரின் பேரில் ரயில்வே போலீசார் இரண்டு மாணவர்களை கைது செய்தனர்.






